பெண்கள் பகுதி
கீழ்ப்படியுங்கள்
ஜனங்களே சத்தியத்திற்குள் திரும்புங்கள்
கர்த்தாவே, உம்முடைய கண்கள் சத்தியத்தை அல்லவோ நோக்குகின்றது. அவர்களை அடிக்கிறீர், ஆனாலும் அவர்களுக்கு நோகாது; அவர்களை நிர்மூலமாக்குகிறீர், ஆனாலும் புத்தியை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்கிறார்கள். தங்கள் முகங்களைக் கன்மலையைப்பார்க்கிலும் கெட்டியாக்கி, திரும்ப மாட்டோம் என்கிறார்கள். ஏரேமியா 5:3
இன்றைக்கு மிகவும் ஒரு இக்கட்டான காலக்கட்டத்தில் நாம் பயத்தோடும், திகிலோடும், வீட்டிலே முடங்கிக்கிடக்கின்ற ஒரு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றேம். நாம் அனைவரும் தேவனுக்குப் பயப்படுவோமோ என்னவோ ஆனால் உலகத்தில் காணப்படுகின்ற கொள்ளை நோய்க்கு பயப்பட்டு உலகத்தின் சட்டத்திட்டங்களுக்குக் கீழ்ப்படிய முயற்சி செய்கின்றோம் என்பது உண்மை . அது மிகவும் தேவையானது தான். ஆனால் நான் தேவனுடைய மிகுந்த உக்கிர கோபத்திற்குள்ளாகியிருக்கின்றோம் என்பதும் உண்மை. ஆகையால் நாம் சத்தியத்திற்குக் கீழ்ப்படிய வேண்டும் என்பதும் தேவனுடைய எதிர்பார்ப்பு. இந்த கொடிய கொள்ளை நோய் எப்படி பரவுகிறது என்பதைக் குறித்து பலர் பலவிதத்தில் 13) சொன்னாலும் அதனுடைய உண்மை தன்மையினை சரியாக அறிந்து கொள்ள முடியவில்லை என்பதும் உண்மை . இன்று அறிவியல் வளர்ச்சியின் முன்னேற்ற பாதையில் உலகம் சென்றுக் கொண்டிருந்தாலும் இந்த கொடிய கொள்ளை நோய்க்கான மருந்தை கண்டுபிடித்தோம் என்று பலர் கூறினாலும் அது நடைமுறைக்கு வர நாட்கள் செல்லும் என்பதாகும். எது எப்படியாக இருந்தாலும் ஜனங்களாகிய நாம் உணர்ந்து கொள்ள வேண்டியது தேவனுடைய கண்கள் சத்தியத்தை தேசத்திலும், திருச்சபையிலும், மற்ற கூடுகையிலும், குடும்பங்களிலும் ஒவ்வொரு தனி மனித வாழ்க்கையிலும் தேடுகின்றார் என்பதே. இன்று வேதம் கூறுவது போன்று நீதியைத் தேடுகிறவனுமில்லை, சத்தியத்தின்படி வழக்காடுகிறவனுமில்லை; மாயையை நம்பி, அபத்தமானதைப் பேசுகிறார்கள்; தீமையைக் கர்ப்பந்தரித்து அக்கிரமத்தைப் பெறுகிறார்கள். (ஏசா.59:4) இப்படியாகவே ஜனங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
சத்தியம்:
சத்தியம் என்பது வசனம், வேதம் என்பதாகும். உம்முடைய வசனமே சத்தியம். யோவான் 17:17) இந்தசத்தியத்தைதான் தேவனுடைய கண்கள் நம்மிடத்தில் நோக்கி பார்த்து கொண்டிருக்கின்றது. ஆனால் ஜனங்களுடைய வாழ்க்கையில் சத்தியம் மாயாஜாலமாக மாறிக்கொண்டு வருகின்றது. அதற்கு காரணம் சத்தியத்தை தேடுகின்றவர்களும், போதிக்கின்றவர்களும், உணருகின்றவர்களும் மிகவும் குறைவாக தான் உள்ளனர். அநேகர் நினைப்பது இயேசு அழைக்கிறார், விடுவிக்கின்றார், கிருபையுள்ளவர், மாறாதவர், ஆசீர்வதிக்கின்றவர், அற்புதர், இரக்கமுள்ளவர், அன்புள்ளவர் என்று கூறுவதெல்லாம் சத்தியம் என்று ஆனால் அது ஒருபோதும் ஜனங்களை நல்வழிப்படுத்தும் சத்தியமாகாது என்பது உண்மை . இயேசு நம் ஒவ்வொருவரையும் அழைக்கின்றவராகவும், விடுவிக்கின்றவராகவும், மாறாதவராகவும், கிருபையுள்ளவராகவும், இரக்கமுள்ளவராகவும், கருணையுள்ளவராகவும், அன்புள்ளவராகவும் தான் காணப்படுகின்றார் என்பது உண்மை . ஆனால் இந்த பெயரின் பேரில் கூறப்படுவதெல்லாம் ஒரு ஆத்துமாவை நல்வழிப்படுத்துவதற்காக மட்டும் அல்லாமல் பணத்தை சம்பாதிக்கும் ஒரு வியாபார முறைமையுமேயாகும். இந்த வியாபார முறைமைகளெல்லாம் ஜனங்களை சத்தியத்தை விட்டு வழி விலக செய்கின்றது. வேதம் கூறுகின்றது அவர்கள் பொய்யைப் பிரயோகிக்கத் தங்கள் நாவாகிய வில்லை வளைக்கிறார்கள். அவர்கள் இந்த தேசத்திலே பலத்துக் கொள்ளுவது சத்தியத்திற்காக அல்ல, பொல்லாப்பிலிருந்து பொல்லாப்புக்கு நடந்தேறுகிறார்கள். என்னையோ அறியாதிருக்கிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். (எரே.9:3) இப்படியே தான் அநேக ஊழியங்கள் காணப்படுகின்றது. பின்பு எப்படி இவர்களிடம் தேவன் நோக்கிப் பார்க்கும் சத்தியம் காணப்படும். ஆகவே தான் கர்த்தர் தேசங்கள் அனைத்தையும் இந்நாட்களில் அடித்திருக்கிறார். ஆனாலும் ஜனங்களுக்கும், ஊழியர்களுக்கும் நோகவில்லை, உணரவில்லை என்பதும் உண்மை . அதுமட்டுமல்லாமல் ஜனங்களை நிர்மூலமாக்கிறார். ஆனாலும் சத்தியத்தை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்ற நிலமையில் தான் போய்க்கொண்டிருக்கின்றோம். ஆகவே இந்த கொள்ளை நோய் இந்த மாதத்தில் பூரணமாய்த் தீரும், அடுத்த மாதத்தில் தீரும் என்ற எதிர்பார்ப்புகளும் அதமாக்கிற விதத்தில் கொள்ளை நோய்ப் பரவிக் கொண்டிருக்கின்றது.
நம் தேவன் அன்புள்ளவர், விடுவிக்கிறவர், இரக்கமுள்ளவர், கருணையுள்ளவர் தான் ஆனால் உன் தேவனாகிய கர்த்தர் பட்சிக்கிற அக்கினி அவர் எரிச்சலுள்ள தேவன். (உபா.424) என்பதையும் நாம் அறிய வேண்டும். நம் வாழ்க்கையில் விடுதலை, சுகம், ஆசீர்வாதம் எல்லாம் தேவையானது தான் ஆனால் நாம் வேதம் கூறுவதுபோன்று இம்மைக்காக மாத்திரம் நாம் கிறிஸ்துவின் மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப் பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம். (1கொரி.15:19) அவ்வாறு நாம் காணப்படாமலிருக்க வேண்டுமானால் சத்தியத்திற்கு கீழ்ப்படிய வேண்டும். சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமலிருந்தால் சத்தியம் நமக்குள் நிலை கொண்டிராது. மனைவியானவள் தங்கள் சொந்த புருஷர்களுக்கு எந்தக் காரியத்திலும் கீழ்ப்படிந்திருக்க வேண்டுமென்பதும் உபதேசம். எபேசி.5:24. புருஷன்மேல் அதிகாரஞ்செலுத்தவும், ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை. அவள் அமைதலாயிருக்க வேண்டும். (1தீமோத்.2:12). அதெப்படியென்றால் புருஷனையுடைய ஸ்திரீ தன் புருஷன் உயிரோடிருக்குமளவும் நியாயப்பிரமாணத்தின்படியே அவனுடைய நிபந்தனைக்கு உட்பட்டிருக்கிறாள் என்பதும் (ரோமர்.7:2) மனைவியானவள் தன் புருஷனை விட்டுப் பிரிந்து போகக்கூடாது என்பதும் (1கொரி.7:10) இப்படிப்பட்ட அநேக சத்தியங்கள் மனைவியானவளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இவைகளில் நாம் நிலைகொண்டிராமலிருந்தால் சத்தியம் நமக்குள் இல்லை என்பதாகும்.
புருஷர்களைக் குறித்து பார்க்கும் போது புருஷர்கள் கோபமும் தர்க்கமுமில்லாமல் பரிசுத்தமான கைகளை உயர்த்தி எல்லா இடங்களிலேயும் ஜெபம் பண்ண வேண்டுமென்றும் (1தீமோத்.2:8) புருஷர்களே தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்தச் சரீரங்களாகப் பாவித்து, அவர்களில் அன்பு கூரவேண்டும் என்றும் (எபேசியர் 5:28) இப்படிப்பட்ட அநேக சத்தியங்கள் புருஷர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இவைகளில் நாம் நிலைத்திராமலிருந்தால் நமக்குள் சத்தியம் கிடையாது. அதுபோன்று போதகர்களைக் குறித்து பார்க்கும் போது கண்காணியானவன் குற்றஞ்சாட்டப்படாதவனும் ஒரே மனைவியை உடைய புருஷனும் ஜாக்கிரதையுள்ளவனும், தெளிந்தபுத்தியுள்ளவனும், யோக்கியதையுள்ளவனும் அந்நியரை உபசரிக்கிறவனும், போதகசமர்த்தனுமாய் இருக்க வேண்டும். அவன் மதுபானப்பிரியனும், அடிக்கிறவனும், இழிவான ஆதாயத்தை இச்சிக்கிறவனுமாயிராமல், பொறுமையுள்ளவனும், சண்டை பண்ணாதவனும், பண ஆசையில்லாதவனுமாயிருந்து தன் சொந்தக் குடும்பத்தை நன்றாய் நடத்துகிறவனும், தன் பிள்ளைகளைச் சகல நல்லொழுக்கமுள்ளவர்களாக்கி கீழ்ப்படியப் பண்ணுகிறவனுமாயிருக்க வேண்டும். (1தீமோத்.3:2-4) இப்படி காணப்படாத ஊழியர்களிடம் சத்தியம் அவர்கள் வாயில் காணப்படுமா? அப்படிப்பட்ட ஊழியர்களிடம் ஜனங்களாகிய நாம் சத்தியத்தை தேடினால் நமக்கு சத்தியம் கிடைக்குமா? சிந்தியுங்கள். நம்மில் சத்தியம் காணப்பட்டால் மட்டுமே அது மற்றவர்களுக்கு வெளிச்சம் பிரதிபலிக்கின்றதாக காணப்படும்.
இன்று குடும்பங்கள், சபைகள், தேசங்கள் என்று எங்கு பார்த்தாலும் சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கி வைக்கின்ற மனுஷருடைய கிரியைகளைத் தான் பார்க்க முடிகின்றது. வேதம் கூறுகின்றது சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கி வைக்கிற மனுஷருடைய எல்லாவித அவபக்திக்கும், அநியாயத்துக்கும் விரோதமாய் தேவ கோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிக்கிறது என்று (ரோமர் 1:18) இன்று இப்படிப்பட்ட செயல்கள் பெருகிக்கொண்டே வரும் இந்நாட்களில் தான் தேவகோபம் வானத்திலிருந்து உலகமெங்கிலும் வெளிப்படுத்தப் பட்டிருக்கின்றது என்ற உண்மையை (சத்தியத்தை இப்பொழுதாவது உணர்ந்தவர்கள் தங்கள் முகங்களைக் கன்மலையைப்பார்க்கிலும் கெட்டியாக்கி திரும்பமாட்டோம் என்று கூறாமல் சத்தியத்தை தேவன் நம்மிடத்தில் தேடுகிறார் என்ற உணர்வோடு எப்பொழுதும் பயந்திருக்கிற மனுஷன் பாக்கியவான். (தன் இருதயத்தைக் கடினப்படுத்துகிறவனோ தீங்கில் விழுவான். நீதி.28:14) என்ற வசனத்திற்கு கீழ்ப்படிவோமானால் நம்மை பாக்கியவான்களாக மாற்றும்.
சத்தியத்தையும் அறிவீர்கள். சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார். யோ.8:32) அப்படியே சத்தியம் நம்மனைவரையும் இந்த மகா கொள்ளை நோயிலிருந்தும் விடுதலையாக்கும் என்பதையும் அறிவோமாக. தேவன் தாமே கிருபை செய்வாராக. ஆமென்.
சகோதரி.ஹெலன் ஷீன், கேரளா
09946301633