தேவ செய்தி - 2வது பாகம்

                                                              பாவங்கள்


- “என் ஜனத்துக்கு அவர்கள் மீறுதலையும், யாக்கோபின் வம்சத்தாருக்கு அவர்கள் பாவங்களையும் தெரிவி" (ஏசாயா 58:1)


          தேவனுடைய வார்த்தைகளையும், அவருடைய கட்டளைகளையும் மீறுவதே பாவம். அன்பானவர்களே பாவம் எப்படியெல்லாம் நம்மில் கடந்து வருகின்றது என்பதைக்குறித்து கடந்த சில மாதங்களாக சிந்தித்து வருகின்றோம். இந்த மாதத்தில் நாம் உலகத்தில் எப்படியாகயிருக்க வேண்டும் என்பதையும், அப்படி காணப்படாமலிருப்பதினால் நமக்குள் பாவம் நிலைக் கொண்டிருக்கின்றது என்பதையும் குறித்து சிந்திப்போம்.


         "நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருங்கள்; மலையின் மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்க மாட்டாது” - மத். 5:14.


          இந்த வசனத்தைக் குறித்து நாம் சிந்திக்கும் போது நீங்கள் உங்களுக்கோ, உங்கள் குடும்பத்திற்கோ, உங்கள் சபைக்கோ உள்ள வெளிச்சமல்ல; உலகத்திற்குரிய வெளிச்சமாயிருக்கிறீர்கள் என்று தான் இயேசு நாதர் இங்கு கூறுகின்றார். அன்பானவர்களே, நீங்கள் எங்கு, யாருக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள் சிந்திப்பீர். வெளிச்சம் என்றால் என்ன? நம்மால் எப்படி பிரகாசிக்க முடியும்? எதற்காக நாம் வெளிச்சமாக இருக்க வேண்டும்? மத். 13:43-ல் இயேசு கூறும்போது "அப்பொழுது நீதிமான்கள் தங்கள் பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப் போல பிரகாசிப்பார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்று, அப்படியானால் மறுமையில் பரலோக ராஜ்யத்தில் பிரகாசிக்க வேண்டுமானால், இவ்வுலகில் நீதிமான்களாக இருக்க வேண்டும். பரலோக ராஜ்யத்தில் பிரகாசிப்பதற்காகத் தான் நாமிங்கு (உலகத்தில்) வெளிச்சமாக இருக்க வேண்டும்.


    இந்நாட்களில் அநேக சபைகளிலே கூறப்படுவதும், பயிற்சியளிப்பதும் நாமனைவரும் நித்திய வாழ்விலே சூரியனைப் போன்று பிரகாசிப்போம் என்று தான். ஆனால் இவர்கள் இவ்வுலகிலே பிரகாசிப்பதில்லையே. அதைப் பற்றி கூறுவதும் இல்லையே. இன்று ஏராளமான சபைகள் உலகத்திற்கு வெளிச்சமாகவில்லையே? விசுவாசிகளை தங்கள் சபை சட்டங்கள் என்று அவர்களுக்குள் அடைத்து வைத்து அவர்கள் பிரகாசிக்க நினைத்தாலும் பிரகாசிக்க விடாமல் செய்கின்றனர். அப்படி செய்வது பாவம் என்பதை இவர்கள் அறியாமலிருக்கின்றார்களே. நானறிந்த ஒரு பெரிய சபையினர் ஏழைகளுக்கு தருமம் செய்வது கூட தடை செய்திருக்கின்றனர். மற்ற விசுவாசிகளோடோ, ஜனங்களோடோ எந்த விதத்திலும் சம்பந்தம் கலவாதபடி கட்டளையிடப்பட்டுள்ளது. இந்த சபை மக்களின் வீட்டில் ஒரு நல்லதோ, இழப்போ நேரீட்டால் அக்கம் பக்கத்தார் வருவதை கூட இவர்கள் அனுமதிப்பதில்லை. இவர்களால் எப்படி உலகத்திற்கு வெளிச்சமாகயிருக்க முடியும். இவர்களுக்குள் பாவம் நிலைக்கொண்டிருக்கிறது என்பதை ஏன் இவர்களால் அறிய முடியவில்லை. அன்பானவர்களே சிந்தியுங்கள்! இதனையா இயேசு சொன்னார் உலகத்திற்கு வெளிச்சமாயிருங்கள் என்று. உலகிலுள்ள எல்லா பாவிகட்கும் இரட்சிப்பை இலவசமாய் அளிக்கவே மெய்யான ஜீவ ஒளியாகிய கிறிஸ்து உலகிற்கு வந்தார். எந்த பாவி எந்த நிலமையிலாயினும் தன்னிடத்தில் வர அழைத்தாரே!! பின் நமக்குள் எதற்கு இந்த சபைபாகுபாடுகள் காணப்படுகின்றது. இவை குறுகிய மனப்பான்மையிலிருந்து தான் உருவாகின்றது என்பதனை இனியாவது உணர்ந்து கொண்டு உலகிற்கு வெளிச்சமாக முன் வருவோமாக.


         ஒளி என்பது ஒருபோதும் மறைத்து வைக்ககூடிய ஒன்றல்ல. அப்படியானால் நாமும் நம்மை மறைத்து வைக்கக்கூடியவர்களல்ல. ஒளி அல்லது வெளிச்சம் ஒரு பொருளின் மீது படும் போது அந்த பொருள் நம் கண்களுக்கு தெரிய வருகின்றது. அவ்வண்ணம் மெய்யான ஒளியாகிய கிறிஸ்துவின் வெளிச்சம் நம்மில் படுமானில் நம்மை இந்த உலகத்தார் காண்கின்றனர். ஆகையால் நாம் யாருக்கும் மறைவானவர்களல்ல. அதாவது கிறிஸ்துவின் சாட்சிகளாக மற்றவர்களுக்கு உதவுகின்றவர்களாக, சத்துருக்களையும் மன்னித்து சிநேகிக்கின்றவர்களாக, கோபமில்லாதவர்களாக, நீடிய பொறுமையுள்ளவர்களாக தனக்கென்று வாழாமல் பிறருக்காக வாழ்கின்றவர்களாக நாம் பெற்ற சந்தோஷத்தையும், சமாதானத்தையும் மற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்கின்றவர்களாக, இப்படியாக கிறிஸ்துவை மற்றவர்களுக்கு காட்டுகின்றவர்களாக நாம் இந்த உலகத்திலே வாழ வேண்டும். அப்படியாக நாம் கிறிஸ்துவை வாழ்க்கையில் காட்டாதவர்களாக மறைத்து வாழ்கின்றவர்களாக (இருளில்) நாம் காணப்படுவோமானால் நம்மில் பாவம் உணர முடியாத நிலமையில் நிலைக்கொண்டிருக்கின்றது


         ஒரு பொருள் எப்போது, எப்படி பிரகாசிக்கும் என்றால், அல்லது அது மற்றவர்கள் காணும்படியாக தெளிவாக இருக்குமென்றால் அந்த பொருளின் மீது கொஞ்சம் கூட இருள் இல்லாமலிருக்க வேண்டும். அப்பொழுது பிரகாசிக்க முடியும். நாமும் கூட மெய்யான இருதய சுத்தமுள்ளவர்களாக இருந்தால் தான் நம்மால் ஒளி வீச முடியும். இப்படிப்பட்ட பரிசுத்த ஒளியில் நாம் காணப்பட்டால் மட்டுமே மற்றவர்களையும் அவ்வொளியில் (அ) வழியில் நடக்க வைக்க முடியும். அன்பானவர்களே, சிந்திப்பீர்! நாம் காட்டுகின்ற பாதையில் அல்லது வெளிச்சத்தில் மற்றவர்களை நடக்க வைக்க முடியுமா? நான் செய்வது போன்று நீங்களும் செய்யுங்கள் என்று நம்மால் கூற முடிகின்றதா? வேதாகமத்தில் இயேசு (அ) பவுல் போன்றோர் கூறுகின்றார்கள். எங்கள் அடிசுவடுகளை பின்பற்றுங்களென்று. வெளிச்சம் வந்துவிட்டால் இருள் நீங்கிவிடும் என்பார்கள். கிறிஸ்து கூறுகின்றார், நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார். (யோவா. 8:12)ஆகவே நீங்கள் இயேசுவாகிய ஒளியை பின்பற்றுகின்றவர்களாக காணப்படும் போது மெய்யாகவே பாவம் (இருள்) நீங்கினவர்களாக உலகத்திற்கு வெளிச்சம் கொடுக்கின்றவர்களாக காணப்படுவீர்கள். பாவம் உங்களை நெருங்க முடியாது. பாவத்திற்கு ஒரு உதாரணம் வேதாகமத்திலிருந்து பார்ப்போமானால் 1 யோவா. 2:9 சொல்லுகிறது. ஒளியிலே இருக்கிறேன் என்று சொல்லியும் தன் சகோதரனைப்பகைக்கிறவன் இதுவரைக்கும் இருளிலே இருக்கிறான் என்று. தன் சகோதரனைப்பகைத்தவர்களாக யார் யார் இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்களோ? அவர்கள் அனைவரும் பாவத்தில் (இருளில்) இருக்கின்றவர்கள் தான். அவர்களால் உலகத்திற்கு ஒருபோதும் வெளிச்சமாக இருக்க முடியாது.


         வெளிச்சம் என்பது மற்றவர்களுக்கு உற்சாகத்தை எழுப்புகின்றதாகவும், தங்கள் கடமைகளைச் செய்ய தூண்டுகின்றதாகவும், அனைவருடைய அந்தகார பயங்களை நீக்குகின்றதாகவும் காணப்படுகின்றது. இப்படிப்பட்ட வெளிச்சமாகத்தான் நாமும் மாற வேண்டுமென்று மத். 5:16, இயேசு நாதர் கூறுகின்றார், கிறிஸ்துவின் சுபாவம் நம்மிலிருக்குமானால் யாருக்கும் நாம் மறைந்திருக்க முடியாது. மலைமேலிருக்கின்ற பட்டணம் போல் யாவருக்கும் நன்றாய்க் காட்சியளிக்கின்றவர்களாயிருப்போம். இருளிலே நடக்கின்றவர்களுக்கு (பாவத்திலே) மடிந்து போகின்றவர்களுக்கு வெளிச்சமாக மாறுவோம். இயேசு கிறிஸ்துவின் வழியை பின்பற்றுவோம். பிதாவின் சித்தத்தையே செய்வோம். உலகிற்கு ஒளியாக அவருக்காய் வாழ்வோம். நம்மிடமுள்ள அந்தரங்க பாவங்களை உணர்ந்து அறிக்கையிடுவோம். அவைகளை விட்டு விடுவோம். இருட்டிலிருப்பவர்களை ஜீவ ஒளியாகிய கிறிஸ்துவுக்காக அழைத்து செல்வோம். மறுமையில் நித்திய வாழ்வை நாம் ஒன்றாய்க் சந்திக்க ஆயத்தப்படுகின்றவர்களாக காணப்பட இப்புத்தாண்டிலே கர்த்தர்தாமே கிருபை புரிவாராக. ஆமென்.


சகோ. ஷீன் சைரஸ், கேரளா . cell: 09447735981


பெண்கள் பகுதி குடும்பம் கர்த்தர் தழைக்கச் செய்யும் குடும்பங்கள்!! "மருத்துவச்சிகள் தேவனுக்குப் பயந்ததினால் அவர்களுடைய குடும்பங்கள் தழைக்கும்படி செய்தார்'' யாத். 1:21 கிறிஸ்துவுக்குள் அருமையான சத்திய வெளிச்சம் வாசகர்களே நாம் அனைவரும் கர்த்தரின் பெரிதான கிருபையால் தழைக்கும்படி கர்த்தர் நம்மை மறுபடியும் இந்த புத்தாண்டில் பிரவேசிக்க ஒரு அவகாசம் கூட தந்திருக்கிறார். ஆகையால் அவருக்கு நாம் உள்ளத்தின் ஆழத்திலிருந்து நம்மையே ஸ்தோத்திரப் பலியாக ஒப்புக் கொடுக்க தேவன் தாமே கிருபை அளிப்பாராக. இன்றைய நாட்களைக் குறித்து நாம் சிந்திக்கும் போது முந்தின நாட்களை விட இன்றைய நாட்களில் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவர்கள் என்று சொல்லுகின்றவர்கள் அல்லது கிறிஸ்துவை ஆராதிக்கின்றவர்கள் பெருகி காணப்படுகின்றார்கள். அது போன்று உலகத்தில் பல விதத்தில் பாவ செயல்களும் பெருகி கொண்டே போகின்றது. ஜனம் மனசாட்சி இல்லாதவர்களாக தங்கள் கிரியைகளில் எல்லா இடங்களிலும் உண்மையில்லாதவர்களாகவும் மற்றவர்களை ஏமாற்றுகின்றவர்களாகவும், சதிக்கின்றவர்களாகவும், துரோகம் செய்கின்றவர்களாகவும், பொறாமை, போட்டி மனப்பாண்மை உள்ளவர்களாகவும், இப்படியே தேவநீதிக்கு மாறாக பாவம் செய்கின்றவர்களாகவேகாணப்படுகின்றார்கள் என்பது உண்மை. கிறிஸ்தவர்களென்றால் இயேசுவை தன் வாழ்க்கையில் காட்டுகின்றவர்களே. ஆனால் கிறிஸ்தவர்களுக்குள் தெய்வ பயமில்லாமையால் கிறிஸ்தவர்கள் பெருகுகிறது போன்று பாவமும் பெருகி வருகின்றது என்பது உண்மை . எல்லா சபைகளிலும் வாக்குத்தத்த வசனங்கள் என்ற பெயரில் ஆசீர்வாத வசனங்களை மட்டும் புத்தாண்டில் கொடுக்கின்ற காரணத்தினால், ஜனங்களும் ஆசீர்வாதத்தை மட்டுமே நம்பி கிறிஸ்துவை வாழ்க்கையில் காட்ட மறந்தவர்களாக, தெய்வ பயமில்லாதவர்களாக தங்கள் வாழ்க்கையை தொடருகின்றார்கள். இன்று அநேகர் கிறிஸ்துவை ஆராதிப்பதே உலக ஆசீர்வாதங்களுக்காக அல்லது செல்வ செழிப்பிற்காக மட்டுமே. அதற்காகவே ஜனங்கள் ஓடி தேடி அலைகின்றார்கள். எந்த சபையில் சென்றால் ஆசீர்வாதம் கிடைக்கும், எந்த ஆராதனையில் ஆசீர்வாதம், சுகம், சமாதானம் கிடைக்குமென்று, அதுபோன்று எந்த ஊழியக்காரரிடம் சென்று ஜெபித்தால் அல்லது தலையில் கைகளை வைத்தால் ஆசீர்வாதம் கிடைக்கும்மென்றும், எந்த இடத்தில் ஆசீர்வாத செய்தி கொடுக்கப்படுகின்றது என்றுதான் அலைகின்றார்கள். இவர்கள் தங்கள் நம்பிக்கையை ஊழியக்காரர்கள் மேலும், சபைகளின் மேலும் தான் வைத்திருக்கின்றார்கள். அதோடு சபைக்கும், ஊழியக்காரருக்கும் தான் மகிமையை செலுத்துகின்றார்கள். இதனால் ஜனம் தெய்வ பயமற்றவர்களாக பாவத்தில் தள்ளப்பட்டு விடுகின்றார்கள் என்பதும் உண்மை. இந்நாட்களில் வாக்குத்தத்த வசனங்களைக் கொடுக்கும் போது கர்த்தருக்குப் பயப்படுவதினால் மட்டுமே இந்த ஆசீர்வாத வசனங்கள் உங்களுக்கு பலன் தரும் என்று எச்சரிப்போடு ஊழியர்கள் போதித்தால் ஜனங்களும் கொஞ்சமாவது பாவ உணர்வை பெற்றவர்களாக தெய்வ பயத்தோடு வாழ வழிசெய்யுமே. அது தானே ஆசீர்வாதத்தின் முதல் படி. ஆகவே இனிவரும் நாட்களைக் கர்த்தர் காண கிருபை கிடைக்க சிந்தித்து மனந்திரும்பி தெய்வ பய்ததோடு ஊழியத்தை நிறைவேற்றி நீங்களும் மாதிரியைக் காண்பித்து நல்ல குடும்பங்களைக் கட்டுங்கள். (10 தழைத்து, தழைக்கும் என்பது செழித்து, செழிக்கும் என்றும் குடும்பம், அமைப்பு முதலியவற்றை சிறப்புடன் வளர்த்தல் என்பனவாகும். ஒரு மரம் தழைத்து அல்லது சிறப்புடன் வளர்ந்தது என்றால் அதை குறித்து சிந்திக்கும் போது, இலை உதிர் காலத்திற்கு பின்பு மரங்கள் தழைக்கத் தொடங்கும். அப்படியென்றால் அந்த மரத்தின் பழைய பழுத்துப் போன, பலன் தராத இலைகள் அனைத்தும் தன்னை விட்டு நீக்கும் போது புதிய துளிர் வந்து தழைத்து பலன் தரும் விதத்தில் அல்லது மற்றவர்களுக்கு பிரயோஜப்படும் விதத்தில் அமையும். அதுமட்டுமல்லாமல் பல கொம்புகள் ஓங்கி வளரும் போது தான் மரம் தழைக்கும். இந்த மரத்தை அலங்கரிக்கும் விதத்தில் கொம்புகள் கனி தந்து காணப்படும். இப்படி அலங்கரித்த கொம்புகளோடு கூடிய தழைகள் மற்றவர்களுக்கு நிழலிடுகின்றதாக காணப்படும். அதோடு கொம்புகளில் ஆகாயத்து பறவைகளெல்லாம் கூடு கட்டும். அதோடு மரத்தின் செழிப்பின் மிகுதியினால் பறவைகளுக்கும், மிருகங்களுக்கும், மனிதர்களுக்கும் கூட ஆகாரம் (நன்மை) கிடைக்கும். இந்த மரம் தண்ணீர் ஓடும் ஊற்றினருகே நாட்டப்பட்டதினால் மட்டுமே செழிப்பாக வளர்கின்றது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்த மரத்தைக் குறித்தான சிந்தனையை ஒரு குடும்பத்தோடு ஒப்பிட்டு பார்ப்போமானால் முதலாவது குடும்பம் கிறிஸ்துவாகிய ஜீவதண்ணீர் ஓடும் ஊற்றினருகே நாட்டப்பட்டதாக காணப்பட வேண்டும். அப்படியானால் எப்பொழுதும் பயந்திருக்கின்ற மனுஷன் பாக்கியவான் என்று சொல்லப்பட்ட வசனத்தின்படி (நீதி. 28:14)நாம் தெய்வ பயமுள்ளவர்களாக நம் செயல்களில் காணப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டிலும் தன் பழைய பாவச் செயல்களை விட்டு விட்டு புதிய துளிர் விட வேண்டும். அப்படி விடப்பட்ட துளிர் தழைத்து வளரும் போது அதினால் நாம் மற்றவர்களுக்கு நன்மை (ஆகாரம், பல விதத்திலுள்ள உதவி) கொடுக்கின்றவர்களாக உலகத்திலும், ஆத்மீகத்திலும் காணப்படுவோம். அதோடு நிழல் (ஆறுதல், பாதுகாப்பு, கருணை, இரக்கம்) கொடுக்கின்றவர்களாகவும் காணப்படுவோம். நம் குடும்பத்தை அலங்கரிப்பது என்பது ஆத்மீக கனிகள் (அன்பு, சந்தோஷம், சமாதானம்....) கொடுக்கின்றவர்களாகவும், உலகத்தில் மற்றவர்களுக்கு தங்கள் செழிப்பினால் நன்மை செய்கின்றவர்களாக காணப்படுவது தான். கர்த்தருக்குப் பயப்படாதவன் உலகத்தின் பெயர், புகழ், பெருமை இவற்றிற்காக நன்மை செய்கின்றான். அது பலன் அற்றதாகும்- கர்த்தருக்குப்பயப்படும் குடும்பம் மட்டுமே கர்த்தரால் தழைக்கச் செய்யும் குடும்பமேயாகும். கர்த்தர் குடும்பங்களை தழைக்கும்படி செய்திருக்கிறார். அந்த குடும்பங்கள் அனைத்துமே ஆதியில் கர்த்தருக்குப் பயப்பட்டு தங்கள் கிரியைகளில் உண்மையுள்ளவர்களாக தான் காணப்பட்டார்கள். ஆனால் நாட்கள் செல்ல செல்ல தங்கள் குடும்பங்கள் தழைக்கும்படி செய்தது கர்த்தர் என்பதை மறந்து; தெய்வபயமும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, தங்கள் செழிப்பின்மேல் மட்டும் முழு நம்பிக்கையும் வைத்து, அதற்கு மகிமை கொடுத்து வாழ்கின்றார்கள். அதோடு தங்கள் செழிப்பின் மிகுதியால் தங்ள் இருதயத்தில் மேட்டிமை கொண்டு மற்றவர்களுக்கு நன்மை செய்வதையும் விட்டுவிட்டு; தங்ளுடைய கொம்புகளுக்காகவே மகிமையை சேர்ப்பதற்காக பணத்தை சம்பாதிக்கின்றார்கள். தங்களுடைய கொம்புகள் மற்ற மரத்தின் கெம்புகளைப்பார்க்கிலும் அதிகமாக வானளவாக உயர்ந்திருக்க வேண்டும். மற்றவர்கள் என் செழிப்பைக் குறித்தும் மகிமையைக் குறித்தும் புகழ்ந்து பேச வேண்டும் என்று சுயத்திற்காகவே பாடுபடுகின்றார்கள். ஆகவே கர்த்தர் அவர்களின் கொம்புகள் தழைத்தது போதும். இனி இவன் தழைக்க வேண்டாம் என்று நினைத்து கொம்புகளை வெட்டிப்போடுகிறார் அல்லது பட்டுப்போகச் செய்கின்றார். இதை குறித்து எசேக்கியேல் தீர்க்கதரிசியின் புஸ்தகம் 31-ம் அதிகாரத்தில் வாசித்து உணர முடிகின்றது. "கொம்பு என்பது மக்கள். வேதம் கூறுகின்றது "துன்மார்க்கருடைய கொம்புகளையெல்லாம் வெட்டிப்போடுவேன்; நீதிமானுடைய கொம்புகளோ உயர்த்தப்படும்” என்று சங். 75:10. இன்று கர்த்தர் தழைக்கச் செய்த குடும்பங்கள் அமைப்புகள் கர்த்தருக்குப் பயப்படும் பயம் ஆதியிலுள்ளதை விட்டுவிட்டு செழிப்பின் (1) மிகுதியால் பிள்ளைகளையும் குடும்பங்களையும், அமைப்புகளையும் சரியாக வளர்க்காமல் கர்த்தர் பட்டுப்போகச் செய்யும் நிலமையிலுள்ளது என்பது மிகவும் உண்மையானது. பெருமையுள்ளவர்களுக்கோ தேவன் எதிர்த்து நிற்கின்றார் (யாக். 4:6) என்ற வசனத்தின்படி குடும்பங்கள் பெருமையினால் வெட்டப்பட்டு வருகின்றது என்பதும் உண்மை . இனி நாம் வேதத்தில் கர்த்தர் தழைக்கச் செய்த குடும்பத்தைக் குறித்து சிந்திப்போமானால்; சிப்பிராள், பூவாள் என்ற ஸ்திரீகள் மருத்துவச்சிகளாக வேலைப்பார்த்து வந்தவர்கள். இவர்கள் தங்கள் வேலையிலும் கர்த்தருக்குப் பயப்படும் பயத்தோடு காணப்பட்டார்கள். (யாத். 1:21,17) இங்கு ராஜா (அ) எஜமான் ஒரு கட்டளையை பிறப்பிக்கின்றான். அந்த கட்டளை எப்படிப்பட்டதாக இருந்தாலும் அதை நிறைவேற்ற வேண்டியது ஊழியக்காரனின் கடமை. அப்படிப்பட்ட மிகவும் கடினமான நிலமையில் தான் இந்த மருத்துவச்சிகள் காணப்படுகின்றார்கள். இங்கு ராஜாவின் கட்டளை என்னவென்றால் "எபிரெய ஸ்திரீகளுக்கு பிறக்கும் ஆண்பிள்ளைகளை கொன்றுப் போட வேண்டும்" என்பதே. (யாத். 1:16). இங்கு ராஜாவின் கட்டளை சிசு கொலை செய்ய வேண்டும் என்பதாகும். இது தேவநீதிக்கு அப்பாற்பட்ட கட்டளையாகும். ராஜாவின் கட்டளை தேவநீதிக்கு புறம்பானதா? இல்லையா? என்பதை உணர வேண்டுமானால் தேவ ஞானம் நமக்கு வேண்டும். தேவஞானம் எப்படி கிடைக்கும். வேதம் கூறுகின்றது, "கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்” (நீதி.9:10) என்று. அவ்வாறு மருத்துவச்சிகள் தேவனுக்குப் பயப்பட்டு தங்கள் தொழில் உண்மையுள்ளவர்களாக காணப்பட்டதினால் அந்த மகா பெரிய பாவத்தைச் செய்யாமலிருக்க கர்த்தர் ஞானத்தைக் கொடுத்தார். அதுமட்டுமல்லாமல் ராஜாவின் கட்டளை மீறினால் நிச்சயமாக அவன் தண்டனைக்கு பாத்திரவான். ஆனால் மருத்துவச்சிகள் தேவனுக்குப் பயப்பட்டதினால் ராஜா அவர்களிடம் ஆண்பிள்ளைகளை உயிரோடே காப்பாற்றுகிற காரியம் என்ன என்று கேட்டபோது, மருத்துவச்சிகளால் ராஜாவின் தண்டனைக்கு தப்பும் விதத்தில் தேவன் அவர்களுக்கு ஞானமாய் பதில் சொல்ல அவர்கள் வாயோடே கூட இருந்தார் என்பதை நம்மால் அறிய முடிகின்றதே. மருவத்துவச்சிகள் ராஜாவிற்கு சொன்ன பதில் என்ன? எபிரெய ஸ்திரீகள் எகிப்திய ஸ்திரீகளைப் போல் அல்ல, அவர்கள் நல்ல பலமுள்ளவர்கள்; மருத்துவச்சி அவர்களிடத்துக்குப் போகுமுன்னமே அவர்கள் பிரசவித்தாகும் என்றார்கள் (யாத். 1:19). ஆம் பிரியமானவர்களே கிறிஸ்தவர்களென்றால் நாம் நல்ல பலமுள்ளவர்கள். அப்படிப்பட்ட ஜாதியாக இருக்கும் போது நாம் கர்த்தருக்குப் பயப்பட்டால் கர்த்தர் இந்த மருத்துவச்சிகளுக்கும், எபிரெய ஸ்திரீகளுக்கும் நன்மை செய்தகர்த்தர் நமக்கும் நன்மைச் செய்வார் என்பது அதிக நிச்சயமே. மருத்துவச்சிகள் எதினால் நன்மையைப் பெற்றார்கள்? எதினால் அவர்கள் குடும்பங்களை கர்த்தர் தழைக்கும்படி செய்தார் என்பதை அறிந்த ஜனமே, ஊழியக்காரர்களே, குடும்பங்களே கர்த்தருக்குப் பயப்படுதலை வாழ்க்கையில் காட்டுங்கள், மற்றவர்களுக்கு கர்த்தருக்குப் பயப்படுதலை போதியுங்கள். ஆசீர்வாதத்திற்கும் இந்த உலகத்தின் இச்சைகளை நிறைவேற்றுவதற்காக மட்டும் இயேசுவை ஆராதிக்க ஓடி அலையாதிருங்கள். இன்று அநேகர் ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்ள ஓடுவது: T.V வாங்கினால் அதோடு ஒரு பரிசு பொருள் கிடைக்கும் என்று சொல்லப்பட்ட பரிசு பொருளுக்காக மட்டுமே. T.V வாங்கும் போது கடைக்காரன் அறிவித்த பரிசு பொருளைக் கொடுப்பது நிச்சயம் - அதற்காக T.V வாங்காமல் கடைக்காரனிடம் பரிசு பொருளை மட்டும் இலவசமாய் தாருங்கள் என்று கேட்பது சரியானதா? சிந்தியுங்கள். ஆகவே முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும், அவருடைய நீதியையும் தேடுங்கள். அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்கு கூடக் கொடுக்கப்படும். (மத். 6:33). மனுஷர் கட்டளைக்கு பயப்படாமல் தேவநீதிக்குப் பயப்படுங்கள். ஆசீர்வாதம் இந்த உலகத்தில் தேவை. ஆனால் அதைவிட முக்கியம் கர்த்தருக்குப் பயப்படுதல் என்பதை உணருங்கள். 12) வேதம் கூறுகின்றது, அவருக்குப் பயந்திருங்கள், அவருக்குப் பயந்தவர்களுக்குக் குறைவில்லை (சங். 34:9) என்றும், இதோ கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் இவ்விதமாய் ஆசீர்வதிக்கப்படுவான் (சங். 128:4) என்றும் கூறப்படுகின்றதே. ஆகையால் குடும்பத்தை கர்த்தர் தழைக்கச் செய்யும்படி அவருக்குப் பயப்படும் பயத்தை இந்த புத்தாண்டின் தேவ சத்தமாக காதில் தொனிக்கப்பட்டதாகவும், இருதயத்தில் விருத்தசேதனம் பெற்றவர்களாகவும் வாழ தேவன் தாமே நம் ஒவ்வொருவருக்கும் கிருபைச் செய்வாராக ஆமென். சகோதரி. ஹெலன் ஷீன், கேரளா 0000 POOO o 1. கிறிஸ்தவர்களில் பெரும்பாலானோர் வேதத்தை வாசிக்கின்றவர்கள் தானே ஏன் அவர்களால் வேதத்தின் இரகசியத்தை வாசித்து உணர முடியவில்லை என்று எண்ணினேன். - கர்த்தர் என்னிடம் கனநித்திரையின் ஆவியையும், காணாதிருக்கிற கண்களையும், கேளாதிருக்கிற காதுகளையும், தேவன் அவர்களுக்கு கொடுத்தார் என்றார். ரோம. 11:8 2.இன்று அநேக கிறிஸ்தவர்கள் நாங்கள் தான் சரியான விசுவாசத்தில் இருக்கின்றவர்கள் என்று மேட்டிமையான எண்ணத்தோடு பேசுகிறார்களே என் நினைத்தேன். - கர்த்தர் என்னிடம் நீ விசுவாசத்தினாலே நிற்கிறாய், மேட்டிமை சிந்தையாயிராமல் பயந்திரு என்றார். ரோம. 11:20 3.எனக்கு செல்வமிருக்கிறது, புகழிருக்கிறது எல்லாமே எனக்கு கீழாக தான் இருக்கிறது, என்னால் எதையுமே செய்ய முடியும் என்று இருதயத்தில் நினைத்தேன் - கர்த்தர் என்னிடம் உன் இருதயத்தின் அகந்தை உன்னை மோசம் போக்குகிறது என்றார். ஒப். 1:3 4.நான் வேதம் வாசிக்கின்றேன், ஜெபிக்கின்றேன், மற்றவர்களுக்கு போதிக்கின்றேன், இப்படியாக அநேக விதமான ஊழியங்களை நான் செய்வதினால் சுத்தமாயிருக்கிறேன் என்று எண்ணினேன். - கர்த்தர் என்னிடம் போஜனபானபாத்திரங்களின் வெளிபுறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள். உட்புறத்திலோ அவைகள் கொள்ளையினாலும், அநீதத்தினாலும் நிறைந்திருக்கிறது என்றார். மத். 23:25 5.சபையில் அநேக விதமான ஊழியங்களையும், பதவிகளையும், வகித்துக் கொண்டு சத்தியத்திற்கு மாறுபாடான (மதுபானம், விபசாரம், பொய், களவு, பகை, போட்டி) காரியங்களை செய்தாலும் கர்த்தர் என்னிடத்தில் பிரியமாய் இருக்கிறார் என நினைத்தேன். - கர்த்தர் என்னிடம் உனக்கு (இப்படி செய்கிறவர்களுக்கு) நான் எதராளியாயிருக்கிறேன் என்றார். எரே. 21:13. "மனந்திரும்பினவர்கள் கர்த்தரின் பதில்களுக்கு கீழ்ப்படிகிறவர்களாவார்கள்” ஹெலன் ஷீன், கேரளா. ( நடப்புச் செய்திகள் )